சீனாவில் ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு வெளியேற்றம்…8 பேர் உயிரிழப்பு….

சீனாவில் உள்ள ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயுவை சுவாசித்ததில் 8 பேர் இறந்தனர், 3 பேர் நோய்வாய்ப்பட்டனர். தென் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் நேற்று ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு கசிந்ததையடுத்து, அதை சுவாசித்தவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாகாண தலைநகர் குயாங்கில் உள்ள காவல்துறையினருக்கு அதிகாலையில் ஒரு ரசாயன நிறுவனத்தின் அருகே சிலர் மயக்கத்தில் கிடந்ததாக தகவல் கிடைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து … Read more

உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் தம்பி அடித்துக்கொலை…அண்ணன் அதிரடி கைது..!

டெல்லியின் கல்காஜியில் 32 வயதுடைய நபர் தனது தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொலை செய்துள்ளார். டெல்லியில் ஒரு நபர் குடும்ப பிரச்சனையில் தன் தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தென்கிழக்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் நேற்று முன்தினம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அஜய் குமார் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் உத்தரபிரதேசத்தில் ரே பரேலியைச் சேர்ந்தவர், இறந்த சகோதரர் விஜய் குமார் … Read more

கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் உயிரிழப்பு..!

கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே வர அச்சப்பட்டாலும் … Read more

மருத்துவமனையிலிருந்து 1 மாத குழந்தை கடத்தல்… பெண்ணிற்கு போலீஸ் வளைவீச்சு.!

கோவா மருத்துவமனையில் 1 மாத குழந்தையை திருடிய பெண்ணை போலீஸ் தேடி வருகின்றனர். கோவா மாநிலத்தின் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஒரு மாத குழந்தை கடத்தப்பட்டது, இதையடுத்து கோவா போலீஸ் மாநில அளவில் கடத்தல் காரர்களை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குழந்தையை கடத்திய பெண் ஒரு நபருடன் ஸ்கூட்டரில் ஏறி செல்வதை சி.சி.டி.வியில் கண்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகள் … Read more

மகிழ்ச்சி செய்தி: 300 க்கும் கீழ் குறைந்த கொரோனா புதிய பாதிப்பு…இறப்பு 28 ஆக பதிவு..!

டெல்லியில் இன்று மட்டும் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது, இறப்புகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா போரில் வெற்றியையும் கண்டுள்ளது … Read more

மகிழ்ச்சி செய்தி: 300 க்கும் கீழ் குறைந்த கொரோனா புதிய பாதிப்பு…இறப்பு 24 ஆக பதிவு..!

டெல்லியில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 300 க்கும் கீழ் பதிவாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது, இறப்புகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா போரில் வெற்றியையும் கண்டுள்ளது கெஜ்ரிவால் … Read more

சீனாவுக்கு வாங்க வந்து தடுப்பூசி போட்டு போங்க…தைவானுக்கு சீனா அழைப்பு !

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா … Read more

கையில் பட்டாக்கத்தி வைத்தக்கொண்டு தெருவில் பிறந்தநாள் கச்சேரி…9 பேர் அதிரடி கைது!

ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம். ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி  கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் … Read more

13 வயது சிறுமி பலாத்காரம்…அரசு பள்ளி ஆசிரியர் தலைமறைவு..!

ராஜஸ்தானில் 13 வயசு சிறுமி அரசு பள்ளி ஆசிரியரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் ஷெர்கர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது 13 வயது மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமி மொகம்கர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்த சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்துள்ளது. சிறுமி வயிற்று வலி இருப்பதாக புகார் அளித்து, அவரது பெற்றோரால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு … Read more

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 15,759 பேர் பாதிப்பு…. 378 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 15,759 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,759 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,24,597 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,094 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 378 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று … Read more