ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….

தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை:

இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு செய்யும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் K.S.அர்ச்சுனன தலைமையில் திருவனந்தபுரம் 5.11.17 அன்று விரைந்தனர்.இவர்களுடன் Citu மாவட்டதலைவர் ரசல் (Rusel Retnam) Cpm மாநகரசெயலாளர் ராஜா (Raja Priya), Sfi மாநகர தலைவர் ஜாய்சன் (Joyson Sfi Joyson),விஜயகுமார் தீக்கதிர் ஆகியோருடன் மீனவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 16 பேரும் உடன் சென்றுள்ளனர்.

 

கேரளா அரசு அனைத்து உதவி செய்ய தயார்:

04.11.17 அன்று தூத்துக்குடி மீனவர் காலனியில் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு குளச்சல் பகுதி மீனவர்களுடன் கடலுக்கு சென்ற 6 பேரில் ஜெகன் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அதில் 5 பேர் இறந்தாக தகவல் வந்துள்ளது.இத்தகவல் வந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (cpim) தூத்துக்குடி மாவட்டசெயலாளர் அர்ச்சுனன் ,மாநகரசெயலாளர் ராஜா ,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் நேரடியாக சென்று குடும்பத்தினர் பார்த்தார்கள். பின்னர் தேவாலய ஆயர்(பாதர்) சென்று பார்த்தார்கள் அவர்கள் சில உதவிகள் கேட்டனர். உடலை பார்க்க சென்ற 16பேர் திருவனந்தபுரத்தில் தங்க இடம் இல்லாமல் உள்ளனர் என்றனர். உடனடியாக மாவட்டசெயலாளர் அர்ச்சுனன் தெலைபேசியின் மூலமாக மாநில செயலாளர் G.ராமகிருஷ்னன் தொடர்புகொன்டு பேசினார்.

இதனையடுத்து கேரளா சென்ற மீனவ குடும்பங்கள் சேர்ந்த அனைவரும் கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு அலுவலகத்தில் தங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையக செயலாளர் சஜிவன் உதவிகளை செய்தார்.மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ராஜா பாதிக்கபட்ட மீனவர்களின் கும்பத்தினருக்கு உடை,உணவு போன்றவைகளுக்கு உதவி செய்தார். 5.11.17 அன்று திருவனந்தபுரத்திற்கு சென்று கேரள அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஷர்மத் M.S அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

 

கேரளா முதல்வருடன் சந்திப்பு:

06.11.17 அன்று தூத்துக்குடி மாவட்ட CPM தலைவர்கள், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கேரள முதல்வரை சந்தித்தார்.மேலும் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும்,அவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்யும் என உறுதியளித்ததோடு இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காண DNA பரிசோதனை செய்ய உடனே உத்தரவிட்டார்.

DNA பரிசோதனை:

ஒகி புயலில் சிக்கி தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜெகன் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து discharge செய்யபட்டுள்ளார்.இதனை தொடர்ந்து அவரை இன்று மாலை  வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து,மாநகர தலைவர் முத்துகிருஷ்ணன் ,மாவட்ட துணைத்தலைவர் ராஜா , மாநகர குழு உறுப்பினர் காஸ்ட்ரோ ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று உடல்நலம் விசாரித்தனர்.மேலும் அதே பகுதியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற உடல்களை ராஜா (மாநகர செயலாளர்-cpim) தலைமையில் DNA முடிவுக்காக திருவனந்தபுரத்தில் காத்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும்,உறவினர்களும்…..

 

தமிழகத்தின் முதல்வர் யார்..??

இவைகளை எல்லாம் செய்யவேண்டிய நம்முடைய தமிழக அரசும் நமது முதல்வரும்,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை நடத்திக்கொண்டும்,ஆர்.கே இடைதேர்தலுக்கு ஆளும்கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து கொண்டும் இருக்கிறார் …

மனித நேயத்தோடு நடந்துகொண்ட கேரளா இடது முன்னணி அரசாங்கத்தின் முதல்வர் பினராயி விஜயன் எங்கே நமது முதல்வர் எங்கே….??

 

-சுரேஷ் இசக்கிபாண்டி..

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment