புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!

Rangasamy

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் “புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு நடைபெறும் என கூறினார். மேலும் அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார். கூட்டத்தொடர் எவ்வளவு நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில்  2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் … Read more

ஒரு கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம்.! பிரதமர் மோடி அறிவிப்பு.! 

PM Modi - PM Surya Ghar_ Muft Bijli Yojana

2024-2025-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பிப்.1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் எனவும் நிதியமைச்சர் அறிவித்தார். அதாவது, ஒரு கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் … Read more

Namo Hattrick என எழுதப்பட்ட வாசகம்! காவி உடையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த அமைச்சர்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று ‘நமோ ஹாட்ரிக்’ என்ற வார்த்தைகள் பொறித்த காவி நிற உடையை அணிந்தபடி பாராளுமன்றத்திற்கு வருகை தந்தது சமூகவலைதளங்களில் விவாத பொருளானது. அதாவது, வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பதிவு செய்வார் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் ஹூடி உடை அணிந்திருந்த வீடியோவையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுவதைக் பார்க்க முடிகிறது. அதில், “பிரதமர் … Read more

ஒரு தேசத்துக்கு இரு சட்டங்கள் இருக்கக்கூடாது… மக்களவையில் பிரதமர் மோடி உரை!

pm modi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது. இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் … Read more

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ராமர் கோவில் குறித்து விவாதம்!

parliament budget session 2024

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1ம் தேதி மத்திய அரசின் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்பின் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான … Read more

ஜம்மு & காஷ்மீர்: உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

Rajya Sabha

ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், யூனியன் பிரதேசத்தில் உள்ள பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பட்டியலை மாற்ற வகை செய்யும் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மூன்று மசோதாக்கள் இன்று மாநிலங்களவை பரிசீலினையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை (திருத்தம்) … Read more

தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை..! எதிர்கட்சிகள் கூறுவது தவறு: மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் பேச்சு

மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறும் எதிர்கட்சிகளின் அறிக்கைகள் தவறானது என்று மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் தனது உரையின் போது குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேனி மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். அவர் பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளாக எனது தொகுதியில் நிலுவையிலிருந்த பணிகளை விரைந்து முடிக்க ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நமது பாரத பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. … Read more

முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு! மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளை அறிக்கையில், 2014-ல் பாஜக … Read more

ஊழல். பற்றாக்குறை.. தற்போதைய நிலை.! நாட்டின் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை.!

Finance Minister Nirmala Siitharaman

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.! இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று … Read more

இன்று திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்!

DMK bjp

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்.1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஜார்கண்ட் முதல்வர் விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து … Read more