#Breaking:சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர தடை.!

நேற்று முன்தினம் சீன நாட்டினர் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் செய்ய  இந்திய தூதரகம் அறிவித்தது. இன்று கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர  தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர  தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்து உள்ளது. நேற்று முன்தினம் சீன நாட்டினர் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு … Read more

பாகிஸ்தான் வீரர் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டிகளில் பந்து வீச தடை.!

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது விதிமுறைகளுக்கு மாற்றாக சட்ட விரோதமாக பந்து வீசியதால் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து போட்டியிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், 39 வயதான அவர் டெஸ்டில் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மட்டும் ஆடி வருகிறார். முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் … Read more

வல்லூர் தேசிய அனல் மின்நிலையத்துக்கு தடை…நீதிமன்றம் உத்தரவு….!!

வல்லூர் தேசிய அனல் மின்நிலை நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நிலத்தில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட தடை விதித்து , வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி கடந்த மார்ச்சுடன் முடிவடைந்ததால் தொடர்ந்து ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதித்தது. இதனால் வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட மேலும் 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை…!!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது சமீபத்தில் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் இதுவரையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பின்னர் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த மேலும் 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.  நாம் தமிழர்,தமிழக வாழ்வுரிமை கட்சி,விசிக,முஸ்லிம் மக்கள் முன்னேற்ற கழகம்,மே 17 இயக்கம்,பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளின்  தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை; பாபா ராம்தேவிற்கு மட்டும் 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..?

சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..? என்பது குறித்து நரேந்திர மோடி அரசு ஏன் விசாரணை செய்யவில்லை..? பிரதமர் மோடியின் துணையோடு சாமியார்கள் பித்தலாட்டங்களை தொடர்கிறார்கள்.