பிலிப்பைன்ஸில் பிராத்தனை கூடத்தில் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி, 9 பேர் காயம்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் மிண்டானோ பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான  மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்  7.3ஆக பதிவாகியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று (புதன்கிழமை ) காலை 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமனது பிளிபைன்ஸ் தலைநகர் மணிலா, உள்ளிட்ட சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. அதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.  … Read more

#EarthQuake:பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுலவேசி,கோடமோபாகுவில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. அதைப்போல பிலிப்பைன்சின் மனாய் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.குறிப்பாக பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தோனேசியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,உயிரிழப்புகள்,பொருட் சேதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. Earthquake of Magnitude:6.0, Occurred on 19-04-2022, … Read more

ஓபிஎஸ் விடுத்த கோரிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கை!

அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் அவர்களது உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் திரு. பாலசேகரன் என்பவரின் மகனான சஷ்டிகுமார் பாலசேகரன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும்,15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது,சஷ்டிகுமார் … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மின்டோரா என்ற மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியே 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் … Read more

அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரபல குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ்..!

பிரபல குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு பிரபல குத்துச்சண்டை வீரரான மேனி பக்கியோவ் வருகின்ற 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். இவர் பிடிபி லேபன் கட்சியின் சார்பாக இந்த போட்டியில் பங்குகொள்ள உள்ளார். இது குறித்து கூறிய பக்கியோவ், பிலிப்பைன்ஸ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒரு போராளி, நான் எப்போதும் வளையத்தின் … Read more

பிலிப்பைன்ஸ்: கொரோனா பரவல் 20 லட்சம் பேர் பாதிப்பு..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் காரணத்தால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20 லட்சம் பேர் வரை பாதித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20.03 லட்சம் பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 14,216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு 20,03,955 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 33,533 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் … Read more