பிலிப்பைன்ஸில் பிராத்தனை கூடத்தில் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி, 9 பேர் காயம்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் மிண்டானோ பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான  மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்  7.3ஆக பதிவாகியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று (புதன்கிழமை ) காலை 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமனது பிளிபைன்ஸ் தலைநகர் மணிலா, உள்ளிட்ட சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. அதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.  … Read more

ஓபிஎஸ் விடுத்த கோரிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கை!

அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் அவர்களது உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் திரு. பாலசேகரன் என்பவரின் மகனான சஷ்டிகுமார் பாலசேகரன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும்,15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது,சஷ்டிகுமார் … Read more

ராய் புயல் – பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு எண்ணிக்கை 208 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ’ராய்’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ‘ராய்’ என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கி, ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசியதால், அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான … Read more

பிலிப்பைன்ஸ் சூறாவளி: 75 பேர் உயிரிழப்பு..?

பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்திய ‘ராய்’ என்ற புயல் வெள்ளிக்கிழமை இரவு தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் தாக்கும் முன் செய்த முன்னேற்பாடுகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் வீசிய சக்தி வாய்ந்த புயல் … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மின்டோரா என்ற மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியே 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் … Read more

பிலிப்பைன்ஸில் கடுமையான நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸில் இன்று கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 1.16 மணிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நாட்டின் தாவோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இங்கிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் பூமிக்கு அடியே 69 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக … Read more

பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள கலடாகன் பகுதியில் நேற்று இரவு 8.49 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று இரவு 8.49 மணியளவில் பிலிப்பைன்சின் தென்மேற்கு பகுதியிலுள்ள கலடாகனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 116 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் விரிசல் … Read more

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி..!-பிலிப்பைன்ஸ் அறிவிப்பு..!

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தீவிரமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியிலும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் … Read more