உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி..!-பிலிப்பைன்ஸ் அறிவிப்பு..!

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது.

இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், புதிதாக 16 பேர் டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.