இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 11 பேர் உயிரிழப்பு.. 12 பேரை காணவில்லை!

Volcano Erupts

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றன. அதுவும், எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் … Read more

இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்காத்தால் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 252 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 20 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து, பலி … Read more

உலகின் மிக பெரிய பூ கண்டுபிடிப்பு.. வைரலாகும் வீடியோ!

இந்தோனேசியாவில் காடு வழியாக நடந்து செல்லும் போது தற்செயலாக உலகின் மிகப்பெரிய மலரான ரஃப்லேசியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. வைரலாகும் வீடியோ! காடு வழியாக நடப்பது என்பது உங்கள் உடலுக்கும் மூளைக்கும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை கடைபிடிக்கும் வகையில், சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து கொண்டிருந்த ஒருவர், காட்டுப்பகுதியில் ஒரு அபூர்வ மலர் ஒன்றைக் கண்டுள்ளார். இந்த மலரின் பெயர் ரஃப்லேசியா அர்னால்டி, இது உலகின் மிகப்பெரிய மலர் எனவும், … Read more

#EarthQuake:பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுலவேசி,கோடமோபாகுவில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. அதைப்போல பிலிப்பைன்சின் மனாய் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.குறிப்பாக பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தோனேசியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,உயிரிழப்புகள்,பொருட் சேதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. Earthquake of Magnitude:6.0, Occurred on 19-04-2022, … Read more

பேட்மிண்டன் உலக டூர் இறுதிப்போட்டி: பட்டம் வெல்வாரா பி.வி.சிந்து? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தோனேசியா:இன்று நடைபெற உள்ள பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.  உலக  பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals)  இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் … Read more

ரைஸ் குக்கரை திருமணம் செய்து, 4 நாட்களில் விவாகரத்து செய்த நபர்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்துள்ளார்.  இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்தது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஆடம்பரமான திருமண உடை அணிந்திருந்தார். பிலிப்ஸ் அரிசி குக்கர் மணமகளின் முக்காடு அணிந்திருந்தது. ஒரு படத்தில், மணமகனும், மணமகளும் ஒன்றாக … Read more

இந்தோனேசியா சிறையில் பயங்கர தீ விபத்து – 41 கைதிகள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவிலுள்ள சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 41 கைதிகள் பரிதமாக உயிரிழந்துள்ள நிலையில், 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்தோனேசியாவில் உள்ள பாண்டேன் எனும் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதை பொருள் கடத்தல் கைதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதற்கான வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து தீ மளமளவென்று அனைத்து இடங்களிலும் பரவியதால், சிறைச்சாலையில் இருந்த கைதிகள் வெளியேறுவதில் … Read more