பிலிப்பைன்ஸ்: கொரோனா பரவல் 20 லட்சம் பேர் பாதிப்பு..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் காரணத்தால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20 லட்சம் பேர் வரை பாதித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20.03 லட்சம் பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 14,216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது கொரோனா பாதிப்பு 20,03,955 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 33,533 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் 11 கோடி மக்கள் தொகை இருக்கிறது. இதில் 1.71 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.