அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரபல குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ்..!

பிரபல குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு பிரபல குத்துச்சண்டை வீரரான மேனி பக்கியோவ் வருகின்ற 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். இவர் பிடிபி லேபன் கட்சியின் சார்பாக இந்த போட்டியில் பங்குகொள்ள உள்ளார். இது குறித்து கூறிய பக்கியோவ், பிலிப்பைன்ஸ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஒரு போராளி, நான் எப்போதும் வளையத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒரு போராளியாகவே இருப்பேன் என்று 42 வயதான பக்கியோவ் கூறியுள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் நாட்டில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர் உலக அளவில் குத்துச்சண்டை விளையாட்டில் பல சாதனைகளை பெற்றுள்ளார்.