“40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி;முதல்வர் ஸ்டாலின் இதனைச் செய்ய வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை..!

ஃபோர்டு நிறுவனம் மூடுதல் எதிரொலியாக 40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும்,அந்நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம்,ஆலையை மூடுவதாக அறிவித்ததையடுத்து,மாற்று ஏற்பாடுகள் குறித்து அதன் நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்,ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக … Read more

“படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம்;அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி” – ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு..!

மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  ஆகியோர் தெரிவித்துள்ளனர். வாணியம்பாடி அருகே முன்விரோதத்தால் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில்,சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இயலாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த வசீம் அக்ரம் அவர்களின் … Read more

“மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும்” – ஓபிஎஸ் வாழ்த்து..!

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.மேலும்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் 14 முக்கிய அறிவுப்புகளை முதல்வர் வெளியிட்டார். அதன்படி,மகாகவி பாரதியின் நினைவு நாளான இன்று ‘மகாகவி … Read more

“நீதிக் கட்சியின் பி.சுப்பராயன் மற்றும் பி.டி. இராஜன் ஆகியோருக்கு மணிமண்டபம்” – ஓபிஎஸ் கோரிக்கை..!

நீதிக் கட்சியைச் சேர்ந்த திரு. பி. சுப்பராயன் மற்றும் திரு. பி.டி. இராஜன் ஆகிய இருவருக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதி நாள்: “சமூக நீதி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது இடஒதுக்கீடு தான். இந்த சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய பிறந்தநாள் “சமூக நீதி” நாளாக … Read more

“விநாயகரைத் துதித்து நற்காரியங்கள்;வெற்றியே விளையும்” – ஓபிஎஸ் & ஈபிஎஸ் வாழ்த்து..!

நாளை நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு ஓபிஎஸ் & ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர். மேலும்,அந்த வாழ்த்து செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது: “வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது … Read more

“கேப்டன் விஜயகாந்த் நீடூழி வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் … Read more

மழை வேண்டி பூஜை , யாகம் செய்ய வேண்டும் – அமைச்சர்களுக்கு அதிமுக தலைமை கட்டளை!

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அமைச்சர்கள் கோவில்களில் பூஜை மற்றும் யாகம் செய்ய வேண்டும் என்று அதிமுக கட்டளையிட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னிர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் அதனால் மக்கள் அவதியுறாமல் இருக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள … Read more

போராட்டக்காரர்களை தூண்டி விடும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசினார் : ஓ.பன்னீர்செல்வம் ..!

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்:- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திலே ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக முதல்-அமைச்சர் … Read more