தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

anbil mahesh poyyamozhi

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்பொழுது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்தும், ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, … Read more

துணை முதல்வர் போல உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் போல செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மட்டுமல்லாமல், சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கும் அமைச்சராக இருப்பதால் கிட்டத்தட்ட துணை முதல்வர் போல செயல்பட்டு வருகிறார் என புகழ்ந்து … Read more

ஜேஇஇ தேர்வில் சிக்கல்.? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!

ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு … Read more

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், உதயநிதி பங்கேற்கும் மாநாட்டிற்கான வசூல்.? லஞ்சஒழிப்புதுறையில் புகார்.!

அமைச்சர்கள் உதயநிதி , அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு என கூறி சிலர் வசூலித்ததாக லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  திருச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற உள்ளதாக கூறி சிலர் நான்கொடை வசூல் செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களிடம் இந்த வசூல் வேட்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை லஞ்ச ஒழிப்பு துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

அன்பில் மகேஷின் தாயாரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான  அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து … Read more

உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வாழ்த்துகிறேன்.! அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.!

கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் … Read more

அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள்.  நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான்.  … Read more

மாதா, பிதா, கூகுள், தெய்வம்.! மாணவர்ளின் குரு கூகுள் தான்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!

மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு … Read more

எண்ணும் எழுத்தும்.! ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ உதயநிதி பங்கேற்பு.!

சென்னையில் இன்று எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இறந்துவிட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு … Read more

அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறதா.?! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.!

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு அந்த பாடப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.  சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அரசுப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அமைச்சர் … Read more