அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறதா.?! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.!

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு அந்த பாடப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அரசுப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்கப்பட்டது.

அதற்க்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘ தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் முழுமையாக திட்டமிட்டு மூடப்படுகிறது என்று கூறுவது தவறான கருத்து. அந்த பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளோம்.’என அது குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும், பள்ளி வளாகம் முழுமையாக போதை பொருளற்ற வளாகமாக மாற்ற சிற்பி திட்டம் பயனளிக்கும் எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரையில் நீட் பயிற்சி கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment