அரிவாளுடன் குளத்திற்குள் 3 மணி நேரம் போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையான்-தத்தளித்த சம்பவம்

குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணிநேரமாக போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையன் தீயணைப்புதுறையின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தது காவல்துறை.  திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் அருகே குளத்திற்குள் குதித்த கொள்ளையன் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு  டிமிக்கி கொடுத்துள்ளான்.கொள்ளையனை பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்தவனை தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிளாஸ்டிக் படகு உதவியோடு போலீசாா்  கைது செய்தனர்.அவனிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

சபரி மலைக்கு சென்று விட்டு வீடு செல்லும் வழியில் கார்விபத்து!சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பக்தர்கள்!

சபரி மலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பக்தர்கள். சென்னையை சேர்ந்த 6 ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்தவர்கள் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் வந்த கடையநல்லூர் மெயின் பஜாரில் எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி நிற்காமல் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் … Read more

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – ஒத்திவைத்த தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு.!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  ஒத்திவைத்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். உள்ளாட்சி தேர்தல்,கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கல்லூரிகளுக்கு ஜன.,1தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்களில் நடக்க இருந்த பல்கலை கழகத்தேர்வுகள் அனைத்தும் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் விடுமுறையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான  மாற்று தேதியையும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.அதன் படி … Read more

கேரளாவில் கொலை..தமிழகத்தில் உடல்….மனைவி முகத்தை சிதைத்து உடலை வீசிய கணவன்..மறுபரிசோதனையில் உடல்..!

கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்தில் வீசி எரியப்பட்ட உடல் கொலையை செய்த கொடூர கணவன் கேரள போலீசிடம் சிக்கினான் புதைக்கபட்ட உடல் மீண்டும் மறுபரிசோதனை  கேரளவில் கொலைச்செய்யபட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில்  வீசப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் கேரள போலீசார் முன்னிலையில் மறுபரிசோதனைச் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிடந்தது.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இறந்த பெண்ணின் பெயர் வித்யா என்பதும் அவர் … Read more

அண்ணனுடன் சண்டை! தன் தோழியுடன் மாயமான 10ஆம் வகுப்பு மாணவி! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

வள்ளியூரை சேர்ந்த கந்தன் மகளும், சண்முகம் மகளும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.  இதில் கந்தன் மகள் தன் அண்ணனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் பவித்ரா 10ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சிந்துவும், பவித்ராவும் தோழிகள். இந்நிலையில் பவித்ரா தினமும் டியூசன் போவது வழக்கம். ஆனால் அன்று டியூசன் செல்லவில்லை. இதனால், பவித்ரா அண்ணன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் … Read more

14 காமிராவில் ஒரு கேமிரா மட்டும் தான் வேலை செய்ததா?! வீர தம்பதியின் வீட்டில் நடந்த கொள்ளையில் பல மர்மங்கள்!

கடந்த 11 ஆம் தேதி, திருநெல்வேலி கடையத்தில், சண்முகவேல் மற்றும் செந்தாமரை தங்களது பண்ணை வீட்டில் தனியாக இருந்த போது, இரு கொள்ளையர்கள் அவர்களை தாக்க முயற்சித்தனர். அப்போது அந்த வீரத்தம்பதி அந்த திருடர்களை விரட்டி அடித்ததனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமுக வலைத்தளத்தில் பரவி அந்த தம்பதியை பலரும் பாராட்டினார். மேலும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கையால் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. … Read more

மர வேர்களுக்கு இடையில் கிடைத்த பச்சிளம் பெண் குழந்தை!அதிர்ச்சி அடைந்த மக்கள்!

நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பகுதியில் ஒரு குளம் ஒன்று உள்ளது.அந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது.அப்பகுதியில் மக்கள் சென்று வரும் வழக்கம் உண்டு.அப்போது அப்பகுதியில் ஒரு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள், சுற்றுமுற்றும் பார்த்தபோது மரத்தின் வேர்களுக்கு இடையில் மச்சிளம் பெண் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.பிறந்து சிலமணிநேரம் மட்டுமே ஆன குழந்தையை பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு … Read more

கொத்தனாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்!விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட ஊர்மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ஆவார்.இவர் அப்பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் 3 வயது கைகுழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலை மணிகண்டன் அவருடைய  நண்பர்களுடன் நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது 3 இரு சக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.மேலும் உடன் … Read more

முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி ஐஜி நேரில் தீவிர விசாரணை!

கடந்த மாதம் ஜூலை 23இல் தமிழ்நாடு முழுவதும் பரப்பாக பேசப்பட்ட கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது. இதில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டனர். இதில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை 29இல் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதனை அடுத்து நீதிமன்றம், 5 நாட்கள் கார்த்திகேயனை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. … Read more

குற்றால அருவியில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த  சுரேஷ்குமார் இவர் மனைவி காளீஸ்வரி (20) . இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் குளிக்க சென்றன. மாலையில் சிற்றருவியில் இருவரும் குளித்து கொண்டிருந்த போது காளீஸ்வரி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காளீஸ்வரி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் காளீஸ்வரியை  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். … Read more