அண்ணனுடன் சண்டை! தன் தோழியுடன் மாயமான 10ஆம் வகுப்பு மாணவி! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

அண்ணனுடன் சண்டை! தன் தோழியுடன் மாயமான 10ஆம் வகுப்பு மாணவி! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

  • வள்ளியூரை சேர்ந்த கந்தன் மகளும், சண்முகம் மகளும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 
  • இதில் கந்தன் மகள் தன் அண்ணனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் பவித்ரா 10ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சிந்துவும், பவித்ராவும் தோழிகள்.

இந்நிலையில் பவித்ரா தினமும் டியூசன் போவது வழக்கம். ஆனால் அன்று டியூசன் செல்லவில்லை. இதனால், பவித்ரா அண்ணன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது.

அதன் பிறகு தான் கடைக்கு சென்று வருவதாக கூறி, பவித்ரா, தனது தோழி சிந்துவுடன் வெளியே சென்றுவிட்டார். அனால், அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பின்னர் என்குதேடியும் கிடைக்காததால், தற்போது இரு மாணவிகளின் பெற்றோரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube