பொங்கலுக்கு பிறகு தான் 2023 முதல் சட்டப்பேரவை கூட்டம்.! கரணம் இதுதான்.!

மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை பொங்கல் விடுமுறை கழித்து தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக சட்டப்பேரவையானது  ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் வாரம் தொடங்கும். அதன் பிறகு பொங்கல் விடுமுறை விடப்படுவது வழக்கம் . ஆனால் வரும் 2023வது வருடம் இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொங்கல் விடுமுறை கழித்து தான் 2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாண்டஸ் புயலினால் … Read more

பரந்தூரில் ஏன் விமான நிலையம் வர வேண்டும்.? சட்டப்பேரவையில் தமிழக அமைச்சர் விளக்கம்.!

பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக … Read more

தொடர் அமளி.. ஹிந்தி திணிப்பு தீர்மானம்… விசாரணை அறிக்கைகள்.! இன்றைய சட்டபேரவை நிறைவு.!

சட்டப்பேரவை நேற்று இரங்கல் தீர்மானங்களுடன் நிறைவடைந்த நிலையில், இன்று, இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் அதிமுகவினர் அமளி, இரண்டு விசாரணை கமிஷன் அறிக்கைகள், ஹிந்தி எதிர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு நிறைவடைந்துள்ளது.  சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கி, இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. காலை இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக … Read more

இந்தி திணிப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது.! – சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேச்சு.!

தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக முழு மனதாக ஆதரவு தெரிவிக்கிறது.  – ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பேச்சு.  மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். … Read more

சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை.! அதிமுக எம்எல்ஏக்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.!

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று தமிழக சட்டப்பேரவையில், பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணை தலைவராக வைக்க கூடாது. அதற்கு பதிலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை.! சட்டப்பேரவையில் அதிரடி அறிக்கை.!

2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.  இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு … Read more

நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவும், திமுக ஆலோசனைப்படியும் சபாநாயகர் செயல்படுகிறார்.! இபிஎஸ் குற்றசாட்டு.!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தீர்ப்புக்கு  மாறாக சபாநாயகர் செயல்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை படி சபாநாயகர் செயல்படுகிறார். – என தங்கள் தரப்பு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.  தமிழக சட்டப்பேரவை தொடங்கி இரண்டாவது நாளான இன்று இபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன்கலந்து கொண்டார்.  அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கடுமையான சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்.! சட்டப்பேரவையில் கடும் அமளி.!

1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார்.   தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் … Read more

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள்.! முதல் நாள் அலுவல் நிறைவு.! நாளை ஒத்திவைப்பு.!

மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.  இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர். ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். இந்த நிலையில், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கும் மௌன அஞ்சலி … Read more

#Breaking : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாள்.! இபிஎஸ் தரப்பினர் புறக்கணிப்பு.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரான முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்ற கோரி சபாநாயகரிடம், இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதுகுறித்து, இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் இபிஎஸ் … Read more