சித்ரா பவுர்ணமி விழா பேராவூரணி.! நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் 20-ம்தேதி தொடங்குகிறது..!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காட்டில் உள்ளது ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில். இந்த கோவிலில் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவில் திருவிழாவிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 1-ம் தேதி செவ்வாய்கிழமை முடிய 13 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா … Read more

சங்கரங்கோவில் சங்கரநாராயண சுவாமி..! கோவிலில் சித்திரை திருவிழா..!! இன்று தொடங்குகிறது..!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு … Read more

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில்..!! சித்திரை திருவிழா கோலகலமாக துவங்கியது..!!

சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் கொடி பவனி தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து 8 மணியளவில் கும்ப ஹோமம் மற்றும் நந்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.30 மணியளவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், … Read more

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்..!! சித்திரைத் திருவிழா கொடியேற்றம்..!!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா வரும் மே 8 ஆம் தேதி முதல் 15 ஆம்  தேதி வரை நடக்கவுள்ளது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று நடைபெற்ற கொடியேற்றத்திற்காக உப்பார்ப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்து புனித அகத்தி முக்கொம்புமரத்தை வெட்டி,  கோவிலுக்கு கொண்டுவந்த முக்கொம்பை கன்னீஸ்வரமுடையார் கோவிலுக்குக் கொண்டு சென்று சிறப்பு பூஜை … Read more

இன்றுடன் விரதத்தை..!! நிறைவு செய்த சமயபுரம் மாரியம்மன்..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் தடுத்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் … Read more

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு !

சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில்  இன்று தீர்ப்பு வெளியாகிறது. தமது ஆசிரமத்தில் பெண்களை மயக்கி பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் சீடர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் சிறையை விட்டு நீதிமன்றத்திற்கு ஆசாராம் அழைத்து வரப்பட மாட்டார் என்றும் சிறை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அட்சய திரியை இன்று என்ன செய்ய வேண்டும்..!!செய்தால் என்ன பலன்..!!!

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போனபோது அவர்களுக்கு சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. அள்ள அள்ள உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. முடிந்ததும் கழுவி, கவிழ்த்துவிடுவார். ஒருநாள் மதியம் கிருஷ்ண பரமாத்மா பசியால் வருகிறார். பாத்திரத்தைக் கழுவி, கவிழ்த்துவிட்ட திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை … Read more

அள்ள,அள்ள குறையாமல்..!! அள்ளி வரம் அருளும் அட்சய திருதியை…!! 

தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியாக போற்றப்படும் கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்த நாளில்தான் … Read more

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்.! இன்று சித்திரைத் தேர் திருவிழா கோலாகலம்..!!

திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பால்குடம், காவடி, அக்னி சட்டி, குழந்தைகளுக்கான கரும்பு தொட்டில், முளைப்பாரி, கரகம், பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது … Read more

உண்டியல் பணம் எண்ணும் பணியின் முதல் நாளில் பழனி முருகன் கோவில் காணிக்கை 2 கோடி ரூபாயை தாண்டியது!

உண்டியல் பணம் எண்ணும் பணியின் முதல் நாளில்  பழனி முருகன் கோவில் காணிக்கை 2 கோடி ரூபாயை தாண்டியது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவில் உண்டியல்கள் 21 நாட்களில் நிறைந்தன. இதை அடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டு, கோவில் அலுவலர்கள், பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் நாளில் இரண்டு கோடியே 7 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. ஒரு கிலோ தங்கத்தினாலான … Read more