“3 கோயில்களில் 3 வேளை அன்னதானம்” வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தற்போது காணொலி காட்சி மூலம் ,சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி,இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும்.குறிப்பாக,ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் … Read more

பக்தனுக்காக 21 நாள் பச்சை பட்டிணி விரதம்..இன்று நிறைவு செய்யும் அன்னை

பக்தனுக்காக இப்பூவுலகில் அன்னையே 21 நாட்கள் பச்சை பட்டிணி இருக்கும் அற்புத நிகழ்வானது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுத்தோறும் அன்னையுடன், பக்தர்களும் இவ்விரத்தை மேற்கொள்வது வழக்கம். சமயபுரம் சுயம்பு மாரியம்மன் கோவில்  கடந்த மார்ச்.,8ந்தேதி அன்று பச்சை பட்டிணி விரதத்தை தொடங்கிய விரதம் 21 நாட்கள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.விரதம் முடிந்தவுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று சித்திரை திருவிழா நடைபெறும.ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. … Read more

28 நாட்கள் பக்தனுக்காக பச்சைபட்டணி விரதத்தை தொடங்கினாள் அன்னை..!

சமயபுரம் மாரியம்மன் என்றலே தனிச்சிறப்பு தான் அதிலும் அன்னையின் கருணை அளவற்றது.இக்கோவிலில் தான் அன்னை அஷ்ட புஜங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.அன்னையின் இந்த திருக்காட்சி வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத ஒரு அரிய திருக்காட்சியாகும்.மாரியம்மன் திரு வடிவங்களில்  சமயபுரம் தான் ஆதி பீடம் ஆகவே தான் அன்னை  மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருஉருவமாக காட்சியாக அருள்பாலிக்கிறார். மும்மூர்த்திகளை காக்கவும், அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை … Read more

தங்கைக்கு தட்டுகளில் சீர்வரிசை அனுப்பிய ரெங்கநாதர் ..! கொள்ளிட ஆற்றில் கோலாகலம்..!!

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை  வழங்கி வருவது வழக்கம்.இதன் … Read more

திருச்சி -சமயபுரம்: குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமயபுரம் அருகேயுள்ள வெங்கங்குடியில் கடந்த   5   நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சேவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமயபுரம் – மண்ணச்சநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

இன்றுடன் விரதத்தை..!! நிறைவு செய்த சமயபுரம் மாரியம்மன்..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் தடுத்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் … Read more

‘சமயபுரம் ‘ஸ்ரீமாரியம்மனுக்கு…! சித்திரை திருத்தேர் விழா …!

சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர்த் திருவிழா – சித்திரை 4, (17/04/2018) செவ்வாய்கிழமை காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல். அன்று இரவு 9.00 மணிக்கு திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி. ( அழைப்பிதழ் இனைத்துள்ளேன்) கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை திருத்தேர் விழா. அம்மனுக்கு மிகமிக விசேஷமானது. சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே ‘சாய்ஞ்சா கண்ணபுரம், … Read more