பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் வினோத் என்ற சிறுவன் விழுந்து உயிரிழப்பு.  கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் 11 வயது சிறுவன் வினோத் என்பவர் விழுந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் வினோத், விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி என்பவரின் மகன். வினோத்  உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை … Read more

கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை…! பழங்குடியின மக்கள் சாலை மறியல்…!

கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை விதித்ததால், பழங்குடியின மக்கள் சாலை மறியல். கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்து பழங்குடி பிரிவினருக்கு இந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இருளர் இனத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இடஒதுக்கீடு பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் இடைக்கால தடை வைத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து, இருளர் சமுதாய … Read more

#BREAKING : அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா…! ஓபிஎஸ் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!

வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.  ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். இதனையடுத்து ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்குவதற்கு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டதற்கு, அதிமுகவினர் சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை … Read more

பெற்றோர் கண் முன்னே மின்சாரத்திற்கு பலியான 8 வயது சிறுவன்!மறியலில் ஈடுபட்ட பெற்றோர்!

திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை தெருவில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார்.அங்குள்ள ஒரு பள்ளியில் இவரது 8 வயது மகன் ரகுநாதன் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக திண்டிவனம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. தற்போது தாலுகா அருகில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள விளக்கின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மூடி வைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஜூலை 9-ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே … Read more

திருச்சி -சமயபுரம்: குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமயபுரம் அருகேயுள்ள வெங்கங்குடியில் கடந்த   5   நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சேவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமயபுரம் – மண்ணச்சநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more