பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் வினோத் என்ற சிறுவன் விழுந்து உயிரிழப்பு. 

கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் 11 வயது சிறுவன் வினோத் என்பவர் விழுந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுவன் வினோத், விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி என்பவரின் மகன். வினோத்  உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment