அரையிறுதியில் விராட் கோலி, நீங்க விடுமுறை எடுத்துக்கோங்க – கெவின் பீட்டர்சன்

டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வெல்லும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன.

இந்த போட்டியை முன்னிட்டு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தும்  என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியாதவது, இந்த டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவை விட இங்கிலாந்தின் கை ஓங்கி இருக்கிறது, ஆனால் விராட் இந்த போட்டியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துவார்,இதனால் இந்தியா-இங்கிலாந்து போட்டியின்போது விராட் கோலி விடுமுறை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார், இந்த தொடரில் அதிக (246)ரன்கள் குவித்த வீரராக கோலி இருக்கிறார். டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு வீரர்களின் நல்ல ஆட்டம் உங்களை தோற்கடித்துவிடும். நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த உலகம் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியை பார்க்கத்தான் ஆவலாக இருக்கிறது ஆனால் இங்கிலாந்து-பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன்.

author avatar
Muthu Kumar

Leave a Comment