ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு !

சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில்  இன்று தீர்ப்பு வெளியாகிறது.

தமது ஆசிரமத்தில் பெண்களை மயக்கி பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் சீடர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் சிறையை விட்டு நீதிமன்றத்திற்கு ஆசாராம் அழைத்து வரப்பட மாட்டார் என்றும் சிறை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment