biggboss 3: கவினுக்கும் சாக்ஷிக்கும் என்ன? கண்கலங்கிய காதலர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உலா பிரபலங்களுக்கு தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தங்களது மனதில் உள்ள கேள்விகளை ஒரு தாளில் எழுதி, மொட்டை கடிதமாக ஒரு பெட்டியில் போட வேண்டும் என்று … Read more

8 வழிச்சாலை வழக்கு : இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி … Read more

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணமா? இது உண்மை தானா?

நடிகர் பிரேம்ஜி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும், பிரபலமான பாடகரும் ஆவார். இவர் வெங்கட் பிரபுவின் சகோதரன் ஆவார். பிரேம்ஜி பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது பெற்றோர்களும், நண்பர்களும் இவருக்கு பெண் தேடி கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு நிற்கும் புகைப்படத்துடன், கேம் ஓவர் என்று எழுதியுள்ளவாறு உள்ள டிஷர்ட்டை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, இதனை … Read more

பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இந்திய பெண்ணை மணக்கிறார்!

பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக் ஏப்ரல் 12, 2010 அன்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்டோபர் 30, 2018 அன்று  இஜான் மிர்சா-மாலிக் என்ற மகன் பிறந்தார். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இந்த வரிசையில் … Read more

இந்தியன் 2வில் இருந்து விலகிய முன்னனி ஒளிப்பதிவாளர்! அதிரடி முடிவெடுத்த படக்குழு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பட ஷூட்டிங் இப்போ அப்போ என தாமதமானதால், படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்க்கு முன்னர் எந்திரன் படத்தில் ரத்னவேலு … Read more

தொடரும் கீழடி அகழாய்வு – பழங்கால கிணறு மற்றும் சுவர்கள் கண்டுபிடிப்பு!

கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக பழங்கால உறை கிணறு மற்றும் இரட்டை சுவர் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வில் சுமார் 2000 வகையிலான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் 5 ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 45 லட்சம் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலத்தில் நடந்து … Read more

ஒரு கிலோ மனோகரி கோல்ட் தேயிலை விலை ரூ.50,000!

அசாம் தேயிலை தோட்டங்களில் பயிராகும் அரியவகை தேயிலை தான் மனோகரி கோல்ட். இந்த மனோகரி கோல்ட் தேயிலை இலைகள் தங்க நிறத்தில் இருப்பதால் இந்த தேயிலைக்கு தனி மவுசு உள்ளது. இந்த தேயிலை நல்ல விளைச்சல் ஆகுவதற்கு சீதோஷ்ண நிலை வேண்டும். ஆனால் இந்த வருடம் சீதோஷ்ண நிலை இல்லாததால் மனோகரி கோல்ட் தேயிலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேயிலை சிறிய மொட்டிகளில் இருந்து பெறப்படுவதால் இதை தயாரிப்பதில் சற்று கடினம்.இந்நிலையில் இந்த மனோகரி கோல்ட் … Read more

போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு-அமைச்சர் சி.வி.சண்முகம்

100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வந்துள்ளது . பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமைகளின் விடுதலை தினமாக அறிவிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்  என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் … Read more

தனி ஆளாக எப்படி இவ்வளவு நகையை திருடினார் கிருஷ்ணா?! – எதிர்பார்ப்பை கூட்டும் கழுகு 2 முக்கிய காட்சிகள் இதோ!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. நாளை இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திலும், கிருஷ்ணா, பிந்து மாதவி, நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சி ப்ரோமோவுக்காக வெளியிடப்பட்டது. அதில், கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் ஓர் அரசியல்வாதி வீட்டில் நகை கொள்ளையடிப்பதுபோல … Read more

இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்!

தீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுரில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி. இவர் தாயார் பெயர் பெரியாத்தா. இவர், மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளை கற்று தேர்ந்துள்ளார். இவர் 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சாலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை வெற்றி … Read more