biggboss 3: கவினுக்கும் சாக்ஷிக்கும் என்ன? கண்கலங்கிய காதலர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உலா பிரபலங்களுக்கு தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தங்களது மனதில் உள்ள கேள்விகளை ஒரு தாளில் எழுதி, மொட்டை கடிதமாக ஒரு பெட்டியில் போட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், சாண்டி எழுதிய கடிதத்தில் கவினுக்கும், சாக்ஷிக்கும் என்ன? என்று எழுதிய நிலையில், இந்த கேள்விக்கு பதிலளித்த கவின் கண் கலங்கினார். மேலும் சாக்ஷியும் கலங்கிய கண்களுடன் எழுந்து செல்கிறார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.