மதுரையில் 11 வயது சிறுமி கொலையில் திருப்பம்! வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

Madurai: மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. Read More – திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் … Read more

மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!

கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது  மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென்  (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள். இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் … Read more

4 வயது மகனை கொன்ற பெண் CEO.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

Suchana Seth

பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம்(ஞாயிறு) நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு நோக்கி வந்துள்ளார். கோவாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணிக்க அதிக கட்டணம், அதிக நேரம் என்பதால், விடுதி ஊழியர்கள் விமானத்தில் பயணிக்கும்படி … Read more

செல்போனுக்காக கொலை செய்யப்பட்ட வட மாநில தொழிலாளி..! நடந்தது என்ன..?

Murder

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா  அருகே நெஞ்சக மருத்துவமனை அருகே புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பீகாரை சேர்ந்த சுபாஷ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவரும் உணவு தயார் செய்வதர்க்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளனர். தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய … Read more

21 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டிய தம்பதியினர்..! தம்பதியினரை கைது செய்த போலீசார்..!

Murder

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்தை சேர்ந்த பெண் திலாபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் சந்திர ரௌத்தை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனார் சந்திர ரௌத்  ஏற்கனவே திருமணம்ஆனவர். அவருக்கு ஆகி குழந்தைகள் உள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்று, சந்திர ரௌத் மனைவியின் முன்பே தன்னை திருமணம் செய்யுமாறு, … Read more

தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை – 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Thoothukudi Murder

தூத்துக்குடியில், முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து … Read more

தூத்துக்குடி காதல் ஜோடி வெட்டிக் கொலை.! பெண்ணின் தந்தை கைது.!

Thoothukudi Murder

தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் இவர்கள் கடந்த 30ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி முருகேசன் நகரில் அவர்கள் இருந்தபோது நேற்று ஒரு மர்ம கும்பல் வீடு … Read more

தூத்துக்குடியில் பயங்கரம்.! காதல் ஜோடி வீடு புகுந்து வெட்டி கொலை.!

Murder in Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தூத்துக்குடி முருகேசன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரி செல்வம் (வயது 24) தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மூத்த மகளான கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிந்து உள்ளது. இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. … Read more

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.!

Encounter Died

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை தமிழக காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். செங்குன்றம் அருகே பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கிலும், நெல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் காவல்துறையினாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறியப்பட்டவர் ரவுடி முத்து சரவணன். பாரியநல்லூர் முன்னாள் … Read more

12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கில் மாறுவேடத்தில் சுற்றி திரிந்த குற்றவாளி கைது..!

Arrest

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே … Read more