பெங்களூரில் 150 அடி தேர் திடீரென சாய்ந்து விபத்து.!

TempleChariotFestival

Bangalore: கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் மிகப்பெரிய தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பக்கமாக சாய்வதை பார்த்து பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து போலீசாரிடம் ரூ. 49,000 அபராதம் செலுத்திவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வாகன உரிமையாளர்

பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்திய நிலையில் அது தொடர்பான நீண்ட ரசீதுகளை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. வடக்கு பெங்களூரு போக்குவரத்து துணை கமிஷனர் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக, KA50-S-3579 வாகனத்தின் உரிமையாளர் முனிராஜிடம் இருந்து 49,100/- ரூபாய் அபராதம் முழுவதையும் வசூலித்தோம் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுடன், வாகனத்தின் உரிமையாளரான முனிராஜ், இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் … Read more

4 வயது மகனை கொன்ற பெண் CEO.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

Suchana Seth

பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம்(ஞாயிறு) நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு நோக்கி வந்துள்ளார். கோவாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணிக்க அதிக கட்டணம், அதிக நேரம் என்பதால், விடுதி ஊழியர்கள் விமானத்தில் பயணிக்கும்படி … Read more

கோவாவில் கொலை… 4 வயது மகனின் உடலுடன் பெங்களூருக்கு தப்பிய பெண் CEO.!

Suchana Seth Mindful AI Labs CEO

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா சேத் என்பவர் தனது 4 வயது மகனை கொலை செய்து உடலை கொண்டு சென்ற குற்றத்திற்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயது பெண்மணியான சுசனா சேத், பெங்களூருவை அடித்தளமாக கொண்ட மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான உள்ளார்.  அவர் நேற்று … Read more

பெங்களூரில் கடைகள் அடித்து உடைப்பு! பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Bengaluru English nameplates

பெங்களூரு நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் பெங்களூரு மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ள கடைகளை கன்னட அமைப்பினர் அடித்து உடைத்து வருகின்றனர். இதனால், பெங்களூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத கடை மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் … Read more

இந்தியாவின் ‘கேக் நகரம்’ எது தெரியுமா.? 2 வினாடிக்கு 5 பிரியாணிகள் ஆர்டர்.! 

Cake city Bangaluru - Briyani

2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் ‘குட் பை’சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதே போல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி (Swiggy) நிறுவனம் தங்கள் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. கேக் நகரம் :  அதன்படி இந்த வருடத்தில் அதிகமாக கேக் ஆர்டர் செய்து “கேக் நகரம்” என கர்நாடக … Read more

பெங்களூருவில் அரசு பெண் அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை..!

கர்நாடகாவில் நேற்று 37 வயதான மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் தொண்டை அறுபட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். உயிரிழந்த பிரதிமா கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர் சுப்பிரமணியம்புரா பகுதியில் வசித்து வந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் இன்று காலை 8.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த கொலை நன்கு திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 6 … Read more

பரபரப்பு…பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்!

BengaluruFire

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் பல்கலைக்கழகம் அருகே, வீரபத்ரநகரில் அமைந்திருக்கும் தனியார் பேருந்து நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீ பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காட்சியளித்தது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சும்மா நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளதாகவும், இதில் … Read more

கொரோனா முன்னெச்சரிக்கை.! பெங்களூரு விமனநிலைத்தில் தீவிர பரிசோதனை…

பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி,  பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை … Read more

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட இளம் கர்ப்பிணி உயிரிழப்பு.!

பெங்களுருவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு 33 வயது கர்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார். பெங்களுருவில் ப்ரீத்தி என்ற 33 வயது கர்ப்பிணிப்பெண், கணவன் இல்லாத சமயம் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். கடந்த டிச-10 ஆம் தேதி மருத்துவ பரிசோதனையின்போது கருத்தரித்திருப்பதை அறிந்த தம்பதிகள், ஏற்கனவே 11 மாத ஆண்குழந்தையை வளர்த்து வருகின்றனர். முதல் குழந்தை ஏற்கனவே கைக்குழந்தையாக இருப்பதால், இரண்டாவது கரு உண்டாகியிருப்பது பிடிக்காத ப்ரீத்தி, கணவனிடம் கருவை கலைக்கலாம் என்று கூறியிருக்கிறார், ஆனால் கணவனோ அதற்கு சம்மதிக்கவில்லை. … Read more