இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்திக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமையைப் பெறவுள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற … Read more

திமுக தலைவர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு  இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில்,தற்போது  மூன்றாவது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  திங்கட்கிழமை அனைத்து கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது இதுதொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more

ஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்… இந்திய பிரதமர் சிறப்புரை…

ஐக்கிய நாடுகள்  பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது. அதில் ‘நாம் விரும்பும் எதிர்காலம், நமக்கு தேவையான ஐ.நா.: பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளும் ஒரு தொலைநோக்கு அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் … Read more

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தலைமை செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை….

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பொழிவைக் கொடுக்கும். அதேபோல் அந்த மழை பொழிவால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும்  மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.எனவே  இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தமிழகஅரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை சென்னை … Read more

வருகின்ற திங்கள்கிழமை திரையுலகினருடன் முதல்வர் சந்திப்பு!

வருகின்ற திங்கள்கிழமை திரையுலகினருடன் முதல்வர் சந்திப்பு நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அரசு கடந்த சில மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் சில தளர்வுகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அன்று தமிழ் திரையுலகினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து நல்ல முடிவு … Read more

முதல்வரை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர்.!

தமிழக பாஜக தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தையும் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பு வெளியிட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த முருகன், பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் … Read more

எம்.பி வசந்தகுமார், பிரதமரை சந்தித்து கோரிக்கை.!

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை ராணுவ விமானம் மூலம் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டுமென கோரிக்கையை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசிய வசந்தகுமாரிடம், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News: சென்னை வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங் ..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங்  தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த சீன அதிபருக்கு மேளதாள வாத்தியங்கள் , கலை நிகழ்ச்சி முழுக்க தமிழகம் சார்பில் சீன அதிபருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்கும் சீன அதிபர் இன்று மாலை கோவளத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கேவ் ஹோட்டலில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷி … Read more

கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் இன்று சந்திப்பு….!!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. இன்றும் , நாளையும்  அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் … Read more

  27 , 28_ஆம் தேதி கிம் ஜாங் உன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு….!!

இந்த மாத இறுதியில் 27 ,28_ஆம் தேதி வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் வியட்நாமில் சந்திப்பது உறுதியாகியுள்ளது. வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் … Read more