சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயல் – டிடிவி தினகரன்.!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும் என்று டிடிவி தினகரன் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு காரணமாக சில இடங்களில் மட்டும் கடைகளை திறப்பதற்கான … Read more

ஆபத்து நிறைந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் – டிடிவி தினகரன்

ஆபத்து நிறைந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக சென்னையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் இன்று அறிவித்துள்ள … Read more

கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகிற நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் … Read more

எளிமையான முறையில்.. டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம்.!

எளிமையான முறையில் நடைபெற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மகனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு பாண்டிச்சேரியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம்நடைபெற்றது. நிச்சயதார்த்தில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மட்டும்  கலந்துகொண்டனர். அடுத்த 3 மாதங்களில் திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால், மாக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா வீரியம் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென … Read more

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்

தூத்துக்குடி அருகே சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் டிடிவி தினகரன் கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ் .31 வயதான பென்னிக்ஸ் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த … Read more

கொரோனாவால் மறைந்தது வேதனையை அதிகமாக்குகிறது – டிடிவி தினகரன் இரங்கல்

திமுக எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் இறப்புக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் சிறுநீரகம் மற்றும் இதைய பிரச்சனை  காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த இரு நாட்களாக அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இந்நிலையில், இன்று காலை 8.05 மணி அளவில் … Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் சிந்தனையோடும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் – டிடிவி தினகரன் கண்டனம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்  வெளியிட்டுள்ள அறிக்கை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத் துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொதுவெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலைத், தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கட்சியின் தகவல் தொழிற்நுட்பப்பிரிவு செயலாளர் முத்துக்குமார் அவர்களை காவல்துறையினர் அதிகாலையில் திடீரென கைது … Read more

வீடு, வீடாக நடத்தப்படும் ஆய்வு சரியில்லை – டிடிவி தினகரன் அறிக்கை.!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்டுப்பாட்டு பகுதி அல்லாத மற்ற இடங்களில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது போன்ற ஒன்றிரண்டு கேள்விகளோடு நோய் கண்டறிதலுக்கான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பையே சோதனை என்றும் இதுவரை 93% பேரிடம் சோதனை செய்யப்பட்டதாகவும் … Read more

தமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை  நீட்டிக்கலாம்- தினகரன்

தமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை  நீட்டிக்கலாம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  தமிழ்நாடு  கொரோனா … Read more