தேமுதிகவில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் – விஜயகாந்த்

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி முதல் மார்ச் 5 வரை பெற்றுக்கொண்டு … Read more

வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது – துரைமுருகன்

எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என்றும் யார் தலைவர் என்பதே குழப்பமாக உள்ளதால் தேர்தல் வரை அதிமுக இருக்குமா என தெரியவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நான்கு ஆண்டு பிறகு சசிகலாவின் வருகை அதிமுகவில் என்ன நடக்கப்போவது என்று … Read more

கதைல ட்விஸ்ட்., தான் எப்போதும் வரமாட்டேன் என்று ரஜினி அறிவிக்கவில்லை – தமிழருவி மணியன்

தான் எப்போதுமே அரசியலில் அதுயெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காந்தி மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காந்தி மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். ரஜினி ஒரு நாள் அரசியலலுக்கு வருவார், முதல்வர் பதவியில் அமர்வார் என்ற கனவில் நீங்கள் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, அடக்கம், … Read more

தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் – ராகுல் காந்தி

தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் என்று ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று கோவையில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு வருவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. பிரதமர் மோடி தமிழ் மொழி, தமிழக கலாச்சாரத்துக்கு … Read more

அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை – ஓபிஎஸ்

சாமானியரும் முதல்வர், துணை முதல்வராக முடியும் என நிரூபித்தது அதிமுகதான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். உரை. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எனக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள் என்று நான் சொன்னதில்லை. கட்சிக்கு மட்டுமே அனைவருமே விசுவாசமாக இருங்கள் என்று சொல்கிறேன். சாமானியரும் முதல்வர், … Read more

தமிழக தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் – மத்திய அமைச்சர்

தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை மறைமலை நகரில் மாநில தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அமைச்சர், நாட்டில் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து தனது ஆட்சியை நிலைநாட்டி கொண்டியிருக்கிறது. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் சரிவை … Read more

ரஜினியை தொடர்ந்து அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஷால்?

ரஜினியை தொடர்ந்து வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ல் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி பணியில் தீவிரம்காட்டி வரும் ரஜினி மக்கள் மன்றம், தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயுத்தமாகி வருகிறது. … Read more

ஒரு மணி நேரத்திற்குள் 2 முறை பேட்டியளித்த ரஜினிகாந்த்! பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்திரன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் . ‘ என தன் மீது கூறப்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்தார். அவரது இந்த … Read more

திமுகவும் அதிமுகவும் உபா சட்டத்திற்கு துணை நின்றது கண்டனத்திற்குரியது! டி.டி.வி.தினகரன் காட்டம்!

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசானது, உபா சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது.  இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஆளுங்கட்சி இச்சட்டத்தை நிறைவேற்றியது. இது குறித்து,  அமமுக தலைவர் டிடிவி.தினகரன் தனது இணையதள பக்கத்தில், ‘சிறுபான்மையினரின் காவலர்கள்’ என்று … Read more