வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது – துரைமுருகன்

எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என்றும் யார் தலைவர் என்பதே குழப்பமாக உள்ளதால் தேர்தல் வரை அதிமுக இருக்குமா என தெரியவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நான்கு ஆண்டு பிறகு சசிகலாவின் வருகை அதிமுகவில் என்ன நடக்கப்போவது என்று தெரியவில்லை. ஒருபக்கம் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் சசிகலா குறித்து இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை, மவுனமாக இருந்து வருகிறார்.

இதனிடையே, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக திட்டமிட்ட சசிகலா, ஓபிஎஸ்சிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது. இதனால், ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் மெரினாவில் தியானம் செய்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்