#Breaking:ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்- என்ன காரணம்?!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்திருந்தார். இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப … Read more

#Breaking:”தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி,பாமக,விசிக,மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரின் கருத்துக்களை கேட்டு … Read more

“மாநில இறையாண்மைக்கு சவால்;இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது” – சீமான் கண்டனம்!

மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது எனவும்,நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் … Read more

முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்;30 நிமிடங்களில் நிறைவு பெற்ற குடியரசு தினவிழா!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியது இதுவே முதல்முறை. … Read more

#Breaking:மழை வெள்ள பாதிப்பு:ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை:தொடர் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு. வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த மழையால் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில்,மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.இதனால்,மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரண நிதி … Read more

Breaking:”எனது பயணத்தின்போது மக்கள் பாதிக்கப்படக் கூடாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை:தனது வாகன பயணத்தின்போது பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று டிஜிபியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். ஆளுநர் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது பொது மக்கள் பாதிக்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னை ராஜ் பவனில் நேற்று (6-11-2021) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர … Read more

போலி பத்திரம்,ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் – ஆளுநர் ஒப்புதல்…!

போலி பத்திரம்,போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு வழங்கும் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.இதனையடுத்து,பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதா முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது. அதாவது,போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட சார் பதிவாளரே விசாரணை செய்து ரத்து செய்யலாம்.மேலும்,போலி பத்திரம் பதிவு … Read more