குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும், நானும் காத்திருக்கிறேன் -மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியார்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் மீண்டுவர வேண்டும் என்று … Read more

மோடி தமிழில் டிவிட்..! துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தொய்வு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் தற்போது ஆழ்துளை கிணறுக்கு அருகில் சுரங்கம் தோண்டும் பணியை ரிக் இயந்திரம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் … Read more

சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது – வைகோ

சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார். நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தின் மீட்பு பணி நடைபெறும் இடத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தில் மழை ..! குழி தோண்டும் பணி தொய்வு ..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 71 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஒரு சுரங்கம் அமைத்து  அதன் மூலம் சுர்ஜித்தை மீட்கும் புதிய திட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் கடினமான பாறைகள் உள்ளதால் துளையிடும்  பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தின் மூலம் பாறைகள் உடைக்க முடியாத நிலையில் … Read more

சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது . எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி … Read more

போர்வெல் மூலம் 5 துளைகள்..!மீண்டும் ரிக் இயந்திரம் பணியை தொடங்கியது ..!

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 71 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் கடினமான பாறைகள் உள்ளதால் துளையிடும்  பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தின் மூலம் பாறைகள் உடைக்க முடியாத நிலையில் போர்வெல் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது போர்வெல் பணிகள் முடிந்தது. பாறையை துளையிட்டு இருந்தால் ரிக் இயந்திரம் மூலம் எளிதாக குழி … Read more

சுர்ஜித் மீண்டுவர பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர  மோடி

சுர்ஜித் மீட்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர  மோடி . திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 69 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. My prayers are with the young and brave Sujith Wilson. Spoke to CM @EPSTamilNadu regarding the rescue efforts underway to save Sujith. Every effort is being made to … Read more

போர்வெல் மூலம் 3 துளைகள்..! பின்னர் ரிக் இயந்திரம் ..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 69 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாறைகள் கடினமாக இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித் உள்ள ஆள்துளை கிணறு அருகில் 90 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை07.10 மணி அளவில் முதல் … Read more

அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் – சத்யராஜ்..!

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் என்ற சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 68 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. சுர்ஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் 90 அடிக்கு குழி தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது. இதற்காக இரண்டு ரிக் இயந்திரங்கள் மூலம் 45 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது போர்வெல் இயந்திரத்தின் மூலமாக குழி தோண்டும் … Read more

இவங்க இருந்திருந்தா குழந்தை சுஜித்தை காப்பாற்ற தேவையான முயற்சிகள் இன்னும் வேகமா நடைபெற்றிருக்கும்! சர்ச்சை நடிகை அதிரடி!

நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில், குழந்தை சுஜித் குறித்து கூறுகையில், ஏன் இன்னும் தமிழக முதல்வர் இவ்விசயத்தில் நேரடியாக இறங்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். தீயணைப்பு துறையினர் துரிதமாக கடின உழைப்பை கொடுத்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். … Read more