சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது .
எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.