இவங்க இருந்திருந்தா குழந்தை சுஜித்தை காப்பாற்ற தேவையான முயற்சிகள் இன்னும் வேகமா நடைபெற்றிருக்கும்! சர்ச்சை நடிகை அதிரடி!

இவங்க இருந்திருந்தா குழந்தை சுஜித்தை காப்பாற்ற தேவையான முயற்சிகள் இன்னும் வேகமா நடைபெற்றிருக்கும்! சர்ச்சை நடிகை அதிரடி!

நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், குழந்தை சுஜித் குறித்து கூறுகையில், ஏன் இன்னும் தமிழக முதல்வர் இவ்விசயத்தில் நேரடியாக இறங்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். தீயணைப்பு துறையினர் துரிதமாக கடின உழைப்பை கொடுத்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா இந்த வேலை இன்னும் வேகமாக நடைபெற்றிருக்கும் என்றும், பொதுமக்களோடு இணைந்து தானும் பிரார்த்தனை செய்து வருவதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube