மோடி தோற்க வேண்டும்.? மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.!

Subramanian Swamy - PM Modi

PM Modi : பிரதமர் மோடி அவரது வாரணாசி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டால் என்னவாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பாஜக தலைவர்களுக்கு எதிராக தனது விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.  பல்வேறு சமயங்களில் இவரது சர்ச்சையான கருத்துக்கள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிவிடுகிறது. அதனாலோ என்னவோ, தேர்தல் நேரங்களில் இவரை பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை அழைப்பதில்லை. வாரணாசி பயணம் : பிரதமர் நரேந்திர … Read more

மோடியை சீனாவுக்கு தூதரக நியமிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

Subramanian Swamy

Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள … Read more

அதிகாரிக்கு கொரோனா.., பொறுப்பை நிதின் கட்கரிக்கு மோடி ஒப்படைக்க வேண்டும்.., சுப்பிரமணியம் சுவாமி.!

கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பத்திக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது. இதற்கிடையில்,  பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கொரோனா பிரச்சினை குறித்து மோடி அரசுக்கு … Read more

பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது – பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி..!

தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெறும், இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, மற்றும் பாமகவுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்ட்டணியில் உள்ள பாஜகவிற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், … Read more

சுப்ரமணியன் சுவாமி ட்வீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி..!

நேற்று நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீது புதிதாக செஸ் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலையை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53 எனவும், இராவணன் ஆண்ட இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.51 என டுவிட் செய்துள்ளார். … Read more

நாளைக்குள் பாஜக ஐடி பிரிவிலிருந்து அமித் மால்வியாவை நீக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்கப்படாவிட்டால், என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்றுதான் அர்த்தம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் … Read more

பாஜக என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கிறது – சுப்பிரமணியன் சுவாமி.!

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியில் இருப்பவர்களில் சிலர் என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கின்றனர் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் மோசமாக உள்ளது. … Read more

குடியுரிமை பெறதா நபர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் – சுப்பிரமணியன் சுவாமி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.  இந்திய குடியுரிமை பெறதா நபர்களை தேடி பிடித்து அவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு … Read more

சசிகலா வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள்-சுப்பிரமணியன் சுவாமி..!

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி நிரூபிக்கபட்டு 4 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது  சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை … Read more

சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது -ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில்

சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது என்று ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நீண்ட நாட்கள் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ரஜினியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை கூறிவருகின்றனர்.அந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் ரஜினி குறித்து … Read more