#BREAKING: பணமதிப்பிழப்பு நடவடிக்கை – மத்திய அரசுக்கு உத்தரவு!

பணமதிப்பிழப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் … Read more

#BREAKING: கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சக்திகாந்த தாஸ், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் (ரெப்போ) 4% ஆக தொடரும் என்றும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றமிருக்காது எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், … Read more

அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம்….! ரிசர்வ் வங்கி அதிரடி…!

அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. இன்று அதிகமானோர் ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுப்பதுண்டு. அந்த வகையில், பல இடங்களில் ஏடிஎம் இருந்தாலும், ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு … Read more

மக்களே உஷார்: ஆகஸ்டில் 15 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

ஆகஸ்ட் மாதத்தில் தனியார் மற்றும் அரசு வங்கிகள் மொத்தம் 15 நாட்கள் இயங்காது என்ற இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கு ஏதேனும் வங்கி தொடர்பான பணிகள் திட்டமிடப்பட்டிருந்தால், உங்கள் வங்கிக்குச் செல்வதற்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் இந்த வங்கி விடுமுறை பட்டியலை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தனியார் மற்றும் அரசு வங்கிகள் மொத்தம் 15 நாட்கள் இயங்காது என்றும் இதில் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை … Read more

வங்கி கடன் தவணை சலுகை காலத்தை நீட்டிப்பது சாத்தியமில்லை- ரிசர்வ் வங்கி.!

வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. வங்கிக் கடன்களுக்கு வட்டி வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது. அதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த … Read more

உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் – ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு. கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடன் தவணை செலுத்த கூடிய கால அவகாசம் ஆகஸ்டு இறுதி வரை ரிசர்வ் வங்கியில் உள்ள போதும் அதை சில வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். வாங்கி கணக்கிலுள்ள பணத்தை ஒப்புதலின்றி பிடித்துக்கொள்வதாகவும், கடனை திருப்பி செலுத்த கோரி வங்கிகளும் நிதி … Read more

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் ! இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் … Read more

இனி கூட்டுறவு வங்கிகள் ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டில் – அவசர சட்டத்திற்கு ஒப்புதல் 

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடியோ கான்பிரான்சிங் மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகையாளர்களின் … Read more

பொருளாதார அம்சங்களை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்.!

வங்கி கடன்களின் வட்டியை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பலர் வங்கிகளில் கடன் வாங்கி வட்டியை கட்ட முடியாமல் அவதி படுகின்றனர். அதனையடுத்து தற்போதுள்ள சூழலை மனதில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டியை வழங்க 6 மாதக் காலம் அவகாசத்தை வழங்கியிருந்தது. இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் 6 மாத … Read more

வருகின்றது புதிய 20 ரூபாய் நாணயம்…. வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு…!!

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் அமுலாக்கி வருகின்றது.இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் காசுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து புதிய நாணயங்களின் வடிவமைப்பு குறித்த  ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகின்ற 16ஆம் தேதி  நடைபெற இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக வர இருக்கும் நாணயத்தை கண்  பார்வை குறைப்பாடு உள்ளவர்களும் எளிதாக பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் … Read more