வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன் – ஓ.பி.எஸ்

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் பேட்டி.  சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களைசந்தித்து பேசினார்.  அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்றும்  தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு … Read more

இந்த முடிவுகளில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் – ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாக்குறுதியைகூட நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு … Read more

தேசிய பத்திரிகையாளர் தினம் – ஓபிஎஸ் ட்வீட்

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.  இன்று தேசிய பத்திரிகையாளர்  தினம் கொண்டாடப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவை பத்திரிகைகளும், ஊடகங்களும். “மனத்தூய்மையுடன் இருப்பதே உண்மையான அறம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, பொதுமக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக, அற வழியில் தைரியத்துடனும், நேர்மையுடனும் செய்திகளை சேகரித்து வெளியிடுவதோடு, ஜனநாயகம் தழைத்தோங்க உறுதுணையாக இருக்கும் ஊடகங்களுக்கும், … Read more

குழந்தைகள் தினம் – வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட்

குழந்தைகள் தினத்தை  முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட். இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால் அது பெற்றோருக்கு மட்டுமின்றி உலகத்தாருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க அறிவாற்றலுடன், பிறரிடம் அன்பு கொள்ளுதல், தமிழ் … Read more

பாஜக கூட்டணி இவர்களோடு தான்.! மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.!

2024 தேர்தலின் போது அதிமுக எந்த வடிவில் இருக்கிறதோ அந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இபிஎஸ் அல்லது ஓபிஎஸ் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, 2024 தேர்தல் சமயத்தில் அதிமுக எந்த வடிவில் இருக்கிறதோ, தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் என்ன விருப்பப்படுகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என பளிச் என பதில் … Read more

அதிமுக பிரச்சனைக்கு பாஜக காரணமில்லை.! – ஓ.பன்னீர்செல்வம் பதில்.!

அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.  தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பாஜக, பிரதமர் மோடி சந்திப்பு, டிடிவி.தினகரனுடன் கூட்டணி என பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தலைமையில் பிரச்சனை இருப்பது போல பிம்பம் உருவாக்கப்படுகிறது என கூறினார். மேலும், அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவிலை. பாஜக இதற்கு காரணமில்லை என பாஜக பற்றிய கேள்விக்கு … Read more

ஆளுநர் தேவையில்லை என கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.! ஓபிஎஸ் கருத்து.!

தமிழக ஆளுநர் தேவையில்லை என கூற இந்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கொள்கைகள் பற்றி பேசுகிறார். சட்ட அமைப்புக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் அவரை பதவி விலக கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் மூலமும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு குரல்களும் , எதிர்ப்பு குரல்களும் வலுத்து … Read more

அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்கிறார் ஓபிஎஸ் – ஜெயக்குமார்

ஓபிஎஸ் அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்து வருகிறார் என ஜெயக்குமார் பேட்டி.  கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் புதுமனை புகுவிழா நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஜெயலல்லதாவால் அடையலாம் காட்டப்பட்டு ஓபிஎஸ்  முதல்வரானார். அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்து வருகிறார்.  ஓபிஎஸ் தொடங்கியுள்ளது தர்மயுத்தம் அல்ல, அவர் தொடங்கியுள்ளது கர்ம … Read more

தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ்

தமிழக ஆளுநர் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என ஓபிஎஸ் பேட்டி.  மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் இயக்கமாகதான் அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். தொண்டர்களின் கையில் வலுவான இயக்கமாக உள்ளது அதிமுக. தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், ஆளுநரை திரும்ப பெற திமுக கூட்டணி வலியுறுத்துவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தமிழக ஆளுநர் … Read more

நானும் இருக்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.! அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்.!

தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு.  நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு … Read more