உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் – அண்ணாமலை

உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை ட்வீட்.  இன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் … Read more

உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.  இன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துகள்! சிறப்புஈனும் … Read more

தேசிய பத்திரிக்கையாளர் தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேசிய பத்திரிக்கையாளர் தினம் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.’ என பதிவிட்டுள்ளார். #தேசியபத்திரிகையாளர்தினம் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை … Read more

தேசிய பத்திரிகையாளர் தினம் – ஓபிஎஸ் ட்வீட்

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.  இன்று தேசிய பத்திரிகையாளர்  தினம் கொண்டாடப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவை பத்திரிகைகளும், ஊடகங்களும். “மனத்தூய்மையுடன் இருப்பதே உண்மையான அறம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, பொதுமக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக, அற வழியில் தைரியத்துடனும், நேர்மையுடனும் செய்திகளை சேகரித்து வெளியிடுவதோடு, ஜனநாயகம் தழைத்தோங்க உறுதுணையாக இருக்கும் ஊடகங்களுக்கும், … Read more

சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! – சீமான்

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நவ.16- ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களாட்சிக் கட்டமைப்பின் நான்காம் தூணாக மக்களாகி, நாட்டின் குடிகளுக்கும், ஆட்சி நடத்தும் அரசுக்குமிடையே … Read more

‘அஞ்சா நெஞ்சினர், கழுகு கண்களை உடையவர்கள்’ – தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து..!

உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஒவ்வொரு வருடமும் நவ.16- ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பத்திரிகைகள் முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த ஒரு நாட்டில் பத்திகை சுதந்திரம் … Read more