குழந்தைகள் தினம் – வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட்

குழந்தைகள் தினத்தை  முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.

இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால் அது பெற்றோருக்கு மட்டுமின்றி உலகத்தாருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க அறிவாற்றலுடன், பிறரிடம் அன்பு கொள்ளுதல், தமிழ் மொழிப் பற்று, தேசப் பற்று, ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளையும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்ற குழந்தைகள் பெற்று சிறப்படைய வேண்டுமென்று தெரிவித்து, இளம் சிறார்கள் அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment