நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும்- முதல்வர் பழனிசாமி

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில்  நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்து காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும். யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை … Read more

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?ஸ்டாலின் கேள்வி

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது .விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நாங்குநேரியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்  மேற்கொண்டார்.அப்[பொழுது அவர் பேசுகையில்,முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் … Read more

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்- அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் பேசுகையில், அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது … Read more

அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார்- அமைச்சர் உதயகுமார்

அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்களாக ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டார்.இந்தநிலையில் நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாங்குநேரியில் லைவில் இருக்கும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு லைஃப் கிடைக்கும், அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார். ஆட்சியில் இருந்தபோது குளங்களை தூர்வாராமல், இப்போது குளங்களை தூர்வாருவதுபோல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். நாங்குநேரி மக்களின் … Read more

இடைத்தேர்தல் :சீமான் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியீடு

சீமான் நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது.தற்போது தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  

இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது . நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தான் நேற்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதற்கு பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் … Read more

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு – பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் இன்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதன் பின்னர் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் … Read more

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு வேண்டும் ! பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதிமுகவில் உள்ள பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பாஜக … Read more

இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.பின்  30-ஆம் தேதியுடன்  வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  நாங்குநேரி … Read more

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதி ! முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் முடிவடைந்துள்ளது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி  நாங்குநேரியில் வரும் 12, 13, 16-ம் தேதிகளிலும், விக்கிரவாண்டியில் 14, 15, 18-ம் தேதிகளிலும் முதலமைச்சர் பழனிசாமி … Read more