#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதியிலும்  திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் என அறிவித்தார்.பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் எனவும் ,வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி ! கைப்பற்றியது அதிமுக

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.தற்போது அதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் … Read more

விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. காலை முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலையில் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 113766  … Read more

விக்கிரவாண்டி தொகுதி ! தடுமாறும் திமுக,முன்னிலையில் அதிமுக

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 13-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 13-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           –  75,888 திமுக               –  46,297 நாம் தமிழர்   – 1,890      

நாங்குநேரி தொகுதி : எந்த கட்சி முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 3-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 2-வது சுற்று முடிவுகள்:  அதிமுக – 14168 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் – 9775 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் – 428 வாக்குகள் பெற்றுள்ளது.  

விக்கிரவாண்டி தொகுதி ! தற்போதைய நிலவரம் என்ன ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 7-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 7-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           – 39,675, திமுக               – 24,468, நாம் தமிழர்   – 1005    

தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும்- கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  இது குறித்து கூறுகையில்,ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார். நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். … Read more

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது- தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில்  … Read more

3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது .தற்போது வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

இடைத்தேர்தல் – மாலை 5 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.  காலை 11 மணி நிலவரம்:  நாங்குநேரி – 62.32% வாக்குப்பதிவு விக்கிரவாண்டி – 76.41% வாக்குப்பதிவு … Read more