தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும்- கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  இது குறித்து கூறுகையில்,ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார்.
நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை நம்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் .