#BREAKING: ஆதார் – மின் இணைப்பு அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜனவரி 31-ஆம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம் என அறிவித்துள்ளார். ஜனவரி … Read more

பில் இருக்கிறதா? இல்லையா? – அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரூ.5 லட்சம் மதிப்பு என்று கூறப்படும் கை கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கடிகாரத்தின் ரசீது கேட்டு திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் வாங்கிய கை கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார். எந்த கடையில் வாங்கப்பட்டது, … Read more

கை கடிகாரம் விவகாரம்: அண்ணாமலைக்கு, செந்தில் பாலாஜி கெடு!

முடிஞ்சா அந்த ‘நபர்’ அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும் என அமைச்சர் கேடு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கை கடிகாரத்தின் விலை ரூ.5 லட்சம் என்பதால் பல்வேறு கேள்விகள் அண்ணாமலையிடம் வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கை கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்குகிறார் என திமுக மாணவரணி தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் … Read more

#BREAKING: பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு – அமைச்சர் அறிவிப்பு

இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு … Read more

டிச.25 சிறப்பு முகாம்கள் செயல்படாது! ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பா? – அமைச்சர் பதில்

ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் செயல்படாது என அமைச்சர் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 31க்கு பிறகு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். டிசம்பர் 31-க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் … Read more

#BREAKING: ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கை

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, … Read more

ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் இலவசம் உண்டு!

ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் உண்டு என மின்சாரத்துறை தகவல். தமிழகத்தில் 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஒருவர் அதாவது ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின் இணைப்புடன் ஆதார் இணைத்த பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இலவசம் மின்சாரம் பெறும் … Read more

100 யூனிட் மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆகையால், வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் … Read more

செந்தில் பாலாஜி குறித்த கருத்து – பாஜக நிர்வாகிக்கு தடை!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிப்பு.  அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் 29-ஆம் தேதிக்குள் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் தொடர்பாக சமூகவலைத்தில் நிர்மல்குமார் விமர்சித்திருந்தார் என கூறப்படுகிறது. எனவே, பாஜக … Read more

தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? – அண்ணாமலை

பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? என அண்ணாமலை கேள்வி.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு … Read more