டிச.25 சிறப்பு முகாம்கள் செயல்படாது! ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பா? – அமைச்சர் பதில்

ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் செயல்படாது என அமைச்சர் அறிவிப்பு.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 31க்கு பிறகு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

டிசம்பர் 31-க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை பொறுத்து அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எட்டப்படும். ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பேச்சுவார்த்தை நடக்கும்போதே போராட செல்வது சரியல்ல என மின் ஊழியர்கள் ஸ்ட்ரைக் குறித்தும் பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment