தொடரும் சைபர் தாக்குதல்.! சாம்சங்கை அடுத்து ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை.!

iPhone Users

ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான … Read more

சாம்சங் போன் பயனர்களே கவனம்.! இந்திய அரசு எச்சரிக்கை.!

samsung galaxy

சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை … Read more

Hacker Attack: ஐசிஎம்ஆர் இணையதளத்தை ஒரு நாளில் 6,000 முறை தாக்கிய ஹேக்கர்கள்

AIIMSக்குப் பிறகு, சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR இன் இணையதளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். ஊடக அறிக்கையின்படி, நவம்பர் 30 அன்று, சைபர் ஹேக்கர்கள் ஐசிஎம்ஆர் இன் அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க முயன்றனர்.இந்த தாக்குதல்கள் ஹாங்காங் ஐபி முகவரியை கொண்டு நிகழ்த்தப்பட்டதாகவும்,இருப்பினும் இந்த சைபர் தாக்குதல் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தவிதமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஃபயர்வாலை புதுப்பிக்குமாறு NIC … Read more

எய்ம்ஸ்-ஐ தொடர்ந்து தமிழக மருத்துவமனை தரவுகளில் கைவரிசை காட்டிய ஹேக்கர்ஸ்.!

1.5 லட்சம் தமிழ்நாடு மருத்துவமனை நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி டார்க் வெப்பில் விற்பனை. நாட்டின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதான கம்ப்யூட்டர் (சர்வர்) கடந்த 23-ம் தேதி திடீரென முடங்கியது. ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் மூலம் ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் சர்வர் செயலிழந்து விட்டது. இந்த முடக்கத்தை விடுவிப்பதற்கு ரூ.200 கோடி கிரிப்டோகரன்சியில் தர வேண்டும் என ஹேக்கர்கள்  மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த முடக்கத்தால் மருத்துவமனையில் ஏராளமான பணிகள் … Read more

சென்னை போலீசாரின் பலே ஐடியா.! ஹேக்கர்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்…

சிசிடிவி-யில் உள்ள முகத்தை கண்டுபிடிப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல்துறை அறிவிப்பு. குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பயன்படும் சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை இதுபோன்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. இரு கட்டங்களாக … Read more

#Hackers:இந்தியாவுக்கு எதிராக சைபர் போருக்கு அழைப்பு விடுத்த ஹேக்கர் குழுக்கள்

நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக மலேசியா, இந்தோனேசிய ஹேக்கர்கள் இந்தியாவை நோக்கி இணைய வழி போரைத் தொடங்கியுள்ளனர். ட்ராகோன்போர்ஸ் மலேஷியா மற்றும் ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா என்ற இரு குழுக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மே 27 அன்று ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்த பிரைம் டைம் விவாதத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா நபிகள்  குறித்து சர்ச்சையாகப் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக் காரணமாக உலகம் முழுவதும் … Read more

பேமெண்ட் சேவை நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.38 கோடி திருட்டு!

பெங்களுருவில் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பேயில் இருந்து ரூ.7.38 கோடி பணத்தை திருடிய ஹேக்கர்கள். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேமெண்ட் சேவை நிறுவனமான ரேஸர்பே-வில் (Razorpay) ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர். ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனம் அளித்த … Read more

மிகப்பெரிய கைவரிசை…600 மில்லியன் டாலர்களை திருடிய ஹேக்கர்கள்!

பிளாக்செயின் நெட்வொர்க்கில் இருந்து 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள்.இது கிரிப்டோ உலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய திருட்டுகளில் ஒன்று. பிரபல ஆன்லைன் விளையாட்டான ஆக்ஸி இன்பினிட்டியின் கேமர்கள் பயன்படுத்தும் ரோனின் அமைப்பின் பிளாக்செயின் நெட்வொர்க்கில் இருந்து 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். 1,73,600 ஈதர்: கடந்த செவ்வாயன்று வெளியான தகவலின் படி,Ronin Network-இன் பிளாக்செயினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 1,73,600 ஈதர் மற்றும் 25.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டேபிள்காயின்,அமெரிக்க … Read more

வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் – அமெரிக்கா அறிவிப்பு..!

வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கணினி மோசடி மற்றும் சட்டத்தை மீறும் ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.ஏனெனில்,அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து ரான்சொம்வேர் (ransomware) தாக்குதல்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெகுமதி சலுகையைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://rewardsforjustice.net/english/ என்ற இணையதளத்தில் … Read more

எனது வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி…! நடிகை சாந்தினி காவல்துறையில் புகார்..!

வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாகவு  காவல்துறையில் நடிகை சாந்தினி மீண்டும் புகார் அளித்துள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது … Read more