எனது வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி…! நடிகை சாந்தினி காவல்துறையில் புகார்..!

வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாகவு  காவல்துறையில் நடிகை சாந்தினி மீண்டும் புகார் அளித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.

மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சாம் பிரசாத் என்பவர், சிபிஐ இயக்குனர் என்று கூறி மின்னஞ்சல் மூலம், மின்னஞ்சலின் கடவு சொல்லை கேட்பதாகவும்,  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்த ஆதாரங்களை அளிக்க முயற்சிப்பதாகவும்,  இதன்மூலம், வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாகவும் காவல்துறையில் ஆதாரங்களை கொடுத்து, மீண்டும் புகார் அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.