யூரோ கோப்பை கால்பந்து – ஸ்பெயினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி..!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து இத்தாலி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.  யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 16 ஆவது சாம்பியன்ஷிப் போட்டி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதல் அரையிறுதி சுற்று இன்று அதிகாலை இந்திய நேரப்படி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணி மற்றும் இத்தாலி அணி மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் இத்தாலி வீரர் … Read more

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா..!

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது. அதில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிப்படுத்தியது. இதனால் 7 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்டினஸ் எளிமையாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை அடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் … Read more

பெரூ அணியை 1-0 என்று வீழ்த்திய பிரேசில் அணி..!-கோப்பா அமெரிக்கா இறுதிக்குள் நுழையும் பிரேசில்..!

கோப்பா அமெரிக்கா 2021 அரையிறுதி போட்டியில் பெரூ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. கோப்பா அமெரிக்கா 2021 தென் அமெரிக்க கால்பந்து போட்டி முதல் அரையிறுதியில் பெரூ அணியை 1-0 என்று வென்று பிரேசில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் கோல்களை பெரூ கோல் கீப்பர் நல்ல முறையில் தடுத்து வந்தார். பிரேசில் அணியின் வீரர்கள் காஸ்மிரோ, நெய்மார், ரிகார்லிசன் ஆகியோர் தொடக்கத்தில் அடித்த கோலை … Read more

விண்வெளியிலிருந்து யூரோ கோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளித்த விண்வெளி வீரர்..!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார்.  நேற்று அதிகாலை யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அணியை முன்னிலைக்கு தள்ளினார். பின்னர், பிரான்ஸ் வீரர் பென்சமே 2 கோல் அடித்து முன்னேறினார். இருந்தபோதிலும், 2ஆவது பாதி ஆட்டத்தின் போது ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். … Read more

ரொனால்டோவை தொடர்ந்து பீர் பாட்டிலை அகற்றிய கால்பந்து வீரர் பால் போக்பா..! வைரலாகும் வீடியோ..!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பால் போக்பா பீர் பாட்டிலை அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கொக்கோ கோலா பாட்டிலை ஒதுக்கி வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை முன் வைத்தார். அது மிக பெரிய அளவில் வைரலானது. தற்போது அதனை தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பால் போக்பா என்ற பிரபல கால்பந்து வீரர் … Read more

#BREAKING: உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா மரணம்.!

கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமானார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவானாக கருதப்படும் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் இவருக்கு மூளையில் ரத்தம் கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.இந்நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமானார்.

கொரோனா தொற்று பாதிப்பால் பிரபல கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு.!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 1966-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட … Read more

போலி பாஸ்போர்ட் விவகாரம்! ஜாமீன் பெற்றார் ரொனால்டினோ

கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில்  ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க … Read more

நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய கால்பந்து வீரர்.! இதோ வீடியோ.!

சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்து களத்தில் இருந்து வெளியேறினார். சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பின்னர் போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் … Read more

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி.!

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டரை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகள் இடையிலான 6-வது சீசன் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் 4-வது … Read more