#Breaking:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பி.யாக பதவியேற்பு!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்,மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்பிக்களில் 24 பேர் தற்போது டெல்லியில் பதவியேற்றுள்ளனர்.அவர்களில் குறிப்பாக,கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல்,காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் உள்ளிட்டோர் புதிய எம்பிக்களாக பதவியேற்றுள்ளனர்.புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியை இன்று மாலை புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். … Read more

#RajyaSabhaElectionResults:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி!

தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. கர்நாடகா: இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை … Read more

“72 மணி நேரத்திற்குள் இதனை செய்யாவிட்டால்…?- திமுக அரசுக்கு அண்ணாமலை விடுத்த கெடு!

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனையடுத்து,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

அதிர்ச்சி…ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?..!

இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின்  சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது. இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் … Read more

பிரதமர் தொடங்கிய சீர்த்திருத்தங்களின் அடிப்படையில‍ேயே பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன்

நீண்டகால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய … Read more

 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 80 மில்லியன் மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டது மற்றும் 400 மில்லியன் மக்கள், விவசாயிகள், பெண்கள் ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சியில் உள்ள சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஒரு வகையான பழக்கமாகிவிட்டது.நாங்கள் … Read more

பட்ஜெட் மீதான விவாதம் -நாளை பதில் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர்

நாளை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  வருகின்ற 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

வரலாற்றிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது – அதானி புகழாரம்!

நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று தொழிலதிபர் அதானி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை … Read more

ஒரு “மாய லாலிபாப்-ஐ” கொடுத்து ஏமாற்றி உள்ளது, அது உண்மை அல்ல – முக ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் தாக்கல் ஒரு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி … Read more

பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு – நிர்மலா சீதாராமன் தகவல்

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது  பெட்ரோல் மீது ரூ.2.50 ,டீசல் மீது ரூ.4 கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல் மற்றும் … Read more