யாருக்காக இந்த பட்ஜெட் உதவிகளும், சலுகைகளும் தந்திருக்க வேண்டும்? – ப சிதம்பரம் விவாதத்திற்கு அழைப்பு

மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பட்ஜெட் தாக்கலில் எந்தவொரு சலுகையும் இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான … Read more

பட்ஜெட் மீதான விவாதம் -நாளை பதில் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர்

நாளை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  வருகின்ற 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் வெறும் ஆயிரம் தான் – சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் போது, வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், 208 கோடி தேவைப்படுகின்ற ராமேஸ்வரம் … Read more

வரலாற்றிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது – அதானி புகழாரம்!

நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று தொழிலதிபர் அதானி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை … Read more

சுகாதாரத் துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி – பிரதமர் மோடி

ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் என்பது வாய்ப்புகளின் பட்ஜெட்டாகும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் என்பது பொருளாதாரத்தை உருவாக்குவதையும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் புதிய  கண்டுபிடிப்புகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஊக்கமும் கொண்டுள்ளது. ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் … Read more

இது மட்டும் தான் வருத்தம்., மற்ற எல்லாம் வரவேற்கத்தக்கது – துணை முதல்வர்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக, அதனை வரவேற்பதாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 15-ஆவது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையில் தமிழகத்தின் பங்கினை குறைத்து பரிந்துரைத்தது வருத்தம் அளிக்கிறது. 2021-22 முதல் 2025-26 … Read more

மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவு, மக்களுக்கு ஏமாற்றம் – கமல்ஹாசன்

மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் மத்திய பட்ஜெட் இருக்கிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால ஊரடங்கு. ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட … Read more

ஒரு “மாய லாலிபாப்-ஐ” கொடுத்து ஏமாற்றி உள்ளது, அது உண்மை அல்ல – முக ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் தாக்கல் ஒரு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி … Read more

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட்- திருமாவளவன் கண்டனம் ..!

பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின் மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையும், விற்கப் போவதாக நிதி அமைச்சர் … Read more

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கல் – ப.சிதம்பரம் விமர்சனம்!

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த பட்ஜெட் தாக்கல் எந்த வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு … Read more