யார் யாருக்கோ தமிழகத்தில் முதலமைச்சராகும் ஆசை வந்துவிட்டது…!

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழகத்தில் யார் யாருக்கோ முதலமைச்சராகும் ஆசை வந்து விட்டதாக  விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னாண்டான் தெருவில் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வேட்டி, சேலை, குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சினிமாவில் நடித்தவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறினார். … Read more

அர்ஜூன் நடித்த காட்சியில் வருவது போல அபிஷேகம் செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள்..!

தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள்  தெலுங்கானா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகோண்டா மதுசூதன் சாரிக்கு பால் அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் பூபாலாபெல்லி மாவட்டத்தில் உள்ள ஆரோபெல்லி கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை, அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகோண்டா மதுசூதன் சாரி திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் அவரை அமரவைத்து முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு பால் அபிஷேகம் செய்வது … Read more

மதுரை ஆதீனம் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து என்ன சொல்கிறார்?

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு, என கருத்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு என்பதாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு அவசியம் என்பதாலும், அதனை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது, என தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், இவ்விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் … Read more

நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் எம்.எல்.ஏவாக இருந்தபோது தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தாக கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டையில் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்தபோது புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மேம்பாலப் பணிகள் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுத்ததற்காக விஜகாந்திற்கு அவரது கட்சியினர் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் … Read more

காவிரி மேலாண்மை வாரியம் கேரள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் வேண்டாம் என்கின்றன…!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் அந்தக் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஏமாற்றுவேலை என  தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நதிகள் மாநிலப்பட்டியலில் உள்ள போது, மத்திய அரசை இதில் குற்றம்சாட்டிப் பேசுவதேன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் ஏன்?யாருக்கான ஆலை இது ?

மக்களும் மண்ணும் அரசு தன் கடமையைச் சரிவர செய்ய வேண்டுமென்றால்  மீட்கவே முடியாத அளவுக்குப் பாதிப்புக்குள்ளாக வேண்டும். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம் காண முடியாத நோய்களால் மக்கள் செத்து மடிய வேண்டும். அல்லது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சாலையில் திரண்டு போராட வேண்டும். தூத்துக்குடியில் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த தூத்துக்குடி மக்களின் குரல், இப்போது பேரிரைச்சலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் பிறகே அந்த ஊரில் காத்திருக்கும் பேராபத்து குறித்துப் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். … Read more

ஸ்டாலின் வாரியம் வரும் வரை சிறையில் இருக்க தயாரா?

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், வாரியம் அமைக்கும் வரை சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சிறையிலிருக்க தயாரா? என  தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வைகோ, திருமா ஆகியோரால் மறுக்கப்பட்ட காவிரி நீர், பா.ஜ.கவால் மட்டுமே கொண்டு வர முடியும். இவர்கள் எவ்வளவுதான் போராடினாலும் காவிரி தண்ணீர் கிடைக்காது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததற்கு காரணம் தி.மு.க … Read more

அதிர்ச்சி தகவல் …!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள நாராயணசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்கள் உடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிவந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் …!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பண்டாரம்பட்டி கிராமத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள … Read more

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவெண் பலகையுடன் வாகனங்களை வழங்கும்…!

மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவெண் பலகைகளுடன் கூடிய வாகனங்களை வழங்குவது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். இப்போது விற்பனையாகும் வாகனங்களுக்கு அதை வாங்குபவரே போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்த பின் பதிவெண் பலகையைத் தனியாக விலை கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டியுள்ளது. எண்ணூறு ரூபாய் முதல் நாற்பதாயிரம் ரூபாய் வரை விலையுள்ள பதிவெண் பலகைகள் உள்ளன. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே பதிவெண் பலகைகளை வாகனங்களில் பொருத்தி வழங்கும் முறை … Read more